உயிர் கொடுத்திடு

துடிக்கு மென்
விரல்கள்
விசைப்ப லகையில்
உரைக்கு மென்
மனதினை,
ரசிக்கு முன்இ தயத்தில்
வெடிக்கும் நம் காதலை,



அடக்கிடும் உள்ளங்கள்
படித்திடுமா நம்
காதலின் சந்தங்கள்!
மடிக்கு முன் இதழ்வரி
வடிக்கும் பல கவிகளை,
இடிக்கும் கவிச்
சரசங்கள் இசைக்கும்
நம் ரகசியங்கள்!

திறக்கு முன் கண்மலர்கள்
திகைக்கும் ஆண் நெஞ்சங்கள்,
குவிக்கு முன்
இதழ்களில் குறுநகை
மோகனப் புன்னகை!

எனை அணைத்தே
உயிர் கொடுத்திடு,
விழியால் எனை
ரசித்திடு-இரு
விதழால் கவி
படைத்திடு,
விழலாய் நான்
துடித்திட!
விளம்பு உன் கவிமொழி
வியக்க நான்
கவின்மொழி!

-கவின்மொழிவர்மன்

Comments

Popular posts from this blog

வாழ்க்கை வாழ்வதற்கே!

BIGG BOSS HINDI - SEASON 11 - VOTING

ஹார்வார்டு தமிழ் இருக்கையின் பின்னணியும் உள்ளரசியலும் !