தீராத காதல் சுமையானதா? தெம்மாங்குப் பாடும் மனம் வேகுதா? ஆறாக கண்ணீர் இங்கோடுதா? அன்பே உன் ஞாபகம் அலை மோதுதா? எழில்கொஞ்சும் தமிழோடு உறவாடு எதிரியும் ஆவான் கருவாடு! நீ பாடும் பாட்டுத் தாலாட்டும் நீ எங்குச் சென்றாலும் சீராட்டும்! அரசர்க்கு அரியணை தந்தாள்! அரும்பாவில் தேனூறச் செய்தாள்! ஒரு பக்கம் கல்வி மறுபக்கம் செல்வம் உலகத்தில் எது இல்லை இங்கே? மன்னர்கள் ஆண்ட காலம் மறத்தமிழர் பூண்ட வீரம் எல்லாமும் இருந்ததே வாழ்வில் இங்கு இல்லாமல் போகுமா சாவில்! கவி பாடிக் களிக்கத்தான் வேண்டும் கனியொத்த மனம் வாழத் தூண்டும் இனியேது உன் வாழ்வில் துன்பம்! இடர் போக்கி அருள்வாளே இன்பம்! -பாவலர் அம்பாளடியாள் நன்றி | இப்பதிவு அம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம்
கொஞ்சம் அயர்ச்சியாகத்தானிருக்கிறது. எனக்கு நானே பேசிக் கொள்(ல்)வதும், தேற்றிக் கொள்(ல்)வதும். ஆனாலும் என்ன திருவிழாக்கூட்டத்தில் வழி தவறிப்போன குழந்தையின் மனம் வாய்க்கப்பட்டிருப்பதில் தனித்துப் பேசிக்கொள்ளுதல் அத்தனை கடினமில்லைதான். மெல்ல வந்து பாதம் தொட்டு சில்லிட வைத்த அலைகளிடத்தில் ஏதேனும் குற்றச்சாட்டை சுமத்தியிருத்தல் சாத்தியமா? ஓடிச் சென்று கால் நனைத்து பெருங்கூவல் விடுத்த ப்ரியங்களைத் தாண்டி கடலில் கலந்துவிட்ட அலையின் மீது பெருங்காதல் எனக்குண்டு. நுரைகளை பரிசளித்த அலையின் கடலில் மூழ்குதலே இறுதிநிலை என்றாலும் கரையில் தேங்கிக் கிடக்கும் எனது ப்ரியங்களை நனைத்துப் போக வரலாம் பேரலை என்றேனும்! இவ்விரவின் பிறைநிலவின் மடியில், பூத்திருக்கும் நட்சத்திரங்களைக் கொய்துவந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இரு நாற்காலியும் ஒரு மேஜையும் போதும் இளைப்பாறுதலை இனிமையாக்க... இரு கோப்பைத் தேநீர் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்! வாசித்து முடித்த பக்கங்களைக் குறித்த என் ரசனையற்ற சொற்களை செவிமடுத்தல் இன்னும் கடினமானதுதான்... போர்க்கால நடவடிக்கையாய் இரு காதுகளுக்கும் அடைத்துக் கொள...
இத்தனை வயதிற்குப் பின்பும் சொற்களைக் குறித்த அச்சமின்மையென்பது வெட்கத்திற்குரியதே! எரிந்த சொல்லமிலத்தின் வெப்பச்சூட்டை சகித்துக் கொண்டு பேரன்பின் ப்ரியங்களை அள்ளித்தர புத்தனுக்கும் இயலாதுதான்! எத்தனை முறைதான் உடன்கட்டை ஏற்றுவேன்.! இமையினும் மேலாய்க் காக்கும் இதயத்தின் உணர்வு நரம்புகளை உருவிக் கொண்டபின் மீட்டிய இசையில் இன்பமில்லை என்னும் என் அதிமேதாவித்தனத்துக்கேனும் பரிசளிக்கப்பட்டிருக்கலாம் இந்த தகிக்கும் கோடை! நாசித்துவாரம் வழி வெளியேறும் காற்று மட்டும் தான் இருப்பினை இக்கணம் வரை மெய்யென பறைசாற்றுகிறது... நான் எடுத்து வீசிய க(சொ)ற்கள் என்னை நோக்கி திரும்பாது என்பதுதான் அதீத காயம் தருகிறது...! எல்லாவற்றையும் தள்ளி வைத்துவிட்டு ஒரு அன்பின் தீண்டல் அவசரமாய் அவசியமாகிறது...! ஒத்திப் போடலாம் வழக்கை, ஒரு கோப்பை தேநீரை பகிர்ந்து கொள்ள வா நிகழ்காலமே! கடிகாரத்தை நிறுத்திவைத்துவிட்டால் என்ன? நகர்ந்து நகர்ந்து நாட்களை மட்டும் நீட்டிக் கொண்டே போகிறது...! வேண்டுமானால் வா விரல்களைக் கோர்த்துக் கொண்டு புதிதாய் பூத்த மஞ்சள் நிறத்து செம்பருத்திப் பூவையும், அதன் இன்னொரு கிளையில் எப்போ...
Comments
Post a Comment