தீராத காதல் சுமையானதா? தெம்மாங்குப் பாடும் மனம் வேகுதா? ஆறாக கண்ணீர் இங்கோடுதா? அன்பே உன் ஞாபகம் அலை மோதுதா? எழில்கொஞ்சும் தமிழோடு உறவாடு எதிரியும் ஆவான் கருவாடு! நீ பாடும் பாட்டுத் தாலாட்டும் நீ எங்குச் சென்றாலும் சீராட்டும்! அரசர்க்கு அரியணை தந்தாள்! அரும்பாவில் தேனூறச் செய்தாள்! ஒரு பக்கம் கல்வி மறுபக்கம் செல்வம் உலகத்தில் எது இல்லை இங்கே? மன்னர்கள் ஆண்ட காலம் மறத்தமிழர் பூண்ட வீரம் எல்லாமும் இருந்ததே வாழ்வில் இங்கு இல்லாமல் போகுமா சாவில்! கவி பாடிக் களிக்கத்தான் வேண்டும் கனியொத்த மனம் வாழத் தூண்டும் இனியேது உன் வாழ்வில் துன்பம்! இடர் போக்கி அருள்வாளே இன்பம்! -பாவலர் அம்பாளடியாள் நன்றி | இப்பதிவு அம்பாளடியாள் அவர்களின் பேஸ்புக் பக்கத்தில் இருந்து பெறப்பட்டது | சிறப்பான வரிகளுக்கு நன்றிகளும் பாராட்டும் | சிகரம்
பங்களாதேஷ், சிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு ஒருநாள் தொடர் அண்மையில் இடம்பெற்று முடிந்தது. அதில் வெற்றி வாகை சூடிய உற்சாகத்துடன் பங்களாதேஷ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் களம் இறங்கியுள்ளது. நேற்று (ஜனவரி 31) ஆரம்பமான முதலாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றது. சிட்டகாங் இல் இடம்பெற்று வரும் போட்டியில் அணி முதலில் துடுப்பெடுத்தாடி 90 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 374 ஓட்டங்களைக் குவித்துள்ளது. டெஸ்ட் போட்டியின் முதல் நாளிலேயே அதிரடியாக ஆடி 4.16 என்னும் ஓட்ட விகிதத்தில் விளையாடி வருகிறது பங்களாதேஷ் அணி. தமிம் இக்பால் 52 ஓட்டங்களையும் இம்ருல் கைஸ் 40 ஓட்டங்களையும் பெற்றுள்ளனர். களத்தில் மொமினுல் ஹக் 175 ஓட்டங்களையும் முஷ்பிகுர் ரஹீம் 92 ஓட்டங்களையும் பெற்ற நிலையில் ஆடி வருகின்றனர். இன்னும் 6 விக்கெட்டுகள் கைவசம் உள்ள நிலையில் இரண்டாம் நாள் ஆட்டத்திலும் பங்களாதேஷ் அணி அதிக ஓட்டங்களைக் குவிக்கும் பட்சத்தில் இலங்கை அணிக்கு அது பாதகமான ...
கொஞ்சம் அயர்ச்சியாகத்தானிருக்கிறது. எனக்கு நானே பேசிக் கொள்(ல்)வதும், தேற்றிக் கொள்(ல்)வதும். ஆனாலும் என்ன திருவிழாக்கூட்டத்தில் வழி தவறிப்போன குழந்தையின் மனம் வாய்க்கப்பட்டிருப்பதில் தனித்துப் பேசிக்கொள்ளுதல் அத்தனை கடினமில்லைதான். மெல்ல வந்து பாதம் தொட்டு சில்லிட வைத்த அலைகளிடத்தில் ஏதேனும் குற்றச்சாட்டை சுமத்தியிருத்தல் சாத்தியமா? ஓடிச் சென்று கால் நனைத்து பெருங்கூவல் விடுத்த ப்ரியங்களைத் தாண்டி கடலில் கலந்துவிட்ட அலையின் மீது பெருங்காதல் எனக்குண்டு. நுரைகளை பரிசளித்த அலையின் கடலில் மூழ்குதலே இறுதிநிலை என்றாலும் கரையில் தேங்கிக் கிடக்கும் எனது ப்ரியங்களை நனைத்துப் போக வரலாம் பேரலை என்றேனும்! இவ்விரவின் பிறைநிலவின் மடியில், பூத்திருக்கும் நட்சத்திரங்களைக் கொய்துவந்துவிடலாமா என்று தோன்றுகிறது. இரு நாற்காலியும் ஒரு மேஜையும் போதும் இளைப்பாறுதலை இனிமையாக்க... இரு கோப்பைத் தேநீர் இருந்தால் இன்னும் சிறப்பாகத்தான் இருக்கும்! வாசித்து முடித்த பக்கங்களைக் குறித்த என் ரசனையற்ற சொற்களை செவிமடுத்தல் இன்னும் கடினமானதுதான்... போர்க்கால நடவடிக்கையாய் இரு காதுகளுக்கும் அடைத்துக் கொள...
Comments
Post a Comment